பதிவு செய்த நாள்
06
பிப்
2016
11:02
பழநி:பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கி (பிப்.,25வரை) 21 நாட்கள் நடக்கிறது. பழநி ஞானதண்டாயுதபாணி கோயிலின் உபகோயில் கிழக்குரத வீதியுள்ள மாரியம்மன்கோயில். மாசிதிருவிழாவை முன்னிட்டு நேற்று இரவு 8.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. பிப்.,9 செவ்வாய் அன்று இரவு 10 மணிக்குமேல் திருக்கம்பம் சாட்டுதல் நடக்கிறது. இதைத்தொடர்ந்து கம்பத்திற்கு புனிதநீர், பால் ஊற்றி, அக்னிச்சட்டிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். பிப்.,16ல் இரவு 8 மணிக்குமேல் கொடியேற்றம் மற்றும் பூவோடு வைத்தல் (தீச்சட்டிஎடுத்தல்) அம்மன் தங்கமயில் வாகனத்தில் உலாவருதல் நடக்கிறது. பிப்.,23 இரவு 7.30 மணிக்குமேல் 8.30 மணிக்குள் திருக்கல்யாணம், பிப்.,24ல் மாலை 4.30மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. விழாநாட்களில் அம்மன் திருவுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பிப்.,22 முதல் 24 வரை பக்திசொற்பொழிவு, இசைசொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பிப்.,25ல் இரவு 10 மணிக்குமேல் கொடியிறக்குதல் விழா முடிகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.