பதிவு செய்த நாள்
06
பிப்
2016
11:02
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, பூச்சட்டிஅள்ளியில், 12 கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய மருந்தீசர் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். தர்மபுரி அடுத்த, பேடரஅள்ளி பஞ்சயாத்துக்குட்பட்ட, பூச்சட்டிஅள்ளி கிராமத்தில் திரிபுர சுந்தரி உடனமர் மருந்தீசர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலை, 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பெரும் செலவு செய்து புதுப்பித்தனர். கோவிலின் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது. விழாவைமுன்னிட்டு நேற்று காலை, 7 மணிக்கு நான்காம் கால வேள்வி, 9 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல், 9.30 மணிக்கு கோவில் விமானங்கள் மற்றும் மூல மூர்த்திகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை குமரகுரு சாமிகள், பேரூராதீனம் இளையபட்டம் மருதால அடிகளார், வேலூர் ரத்தினகிரி மவுன தவஞானி பாலமுருகனடிமை சாமிகள் ஆகியோர் தலைமையில், பேரூர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தலைவர் சென்னியப்பனார் நடத்தினார்.