பதிவு செய்த நாள்
09
பிப்
2016
11:02
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே குழந்தை வரம்வேண்டி அரசமரம் மற்றும் வேப்ப மரத்திற்கும் நுõதன முறையில் திருமண செய் ததில், 33,500 ரூபாய் மொய்ப் பணம் வசூலானது. உளுந்தூர்பேட்டை தாலுகா, நத்தாமூர் கிராமத்தில் வரசித்தி விநாயகர் மற்றும் நாகதேவதா, கெ ங்கமாரியம்மன் கோவில்கள் அருகே அரச மரமும், வேப்ப மரமும் ஒன்றாக வளர்ந்துள்ளது. இதனால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், வரம் வேண்டி இந்த மரங்களுக்கு திருமணம் செய்து வைக்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து, அழைப்பிதழ் தயாரித்து, கிராம பொது மக்களுக்கு வழங்கினர். அதன்படி,நேற்று காலை 9:30 மணிக்கு 100க்கும் மேற்பட்டவர்கள் அங்கு கூடி வேப்ப மரத்திற்கும், அரச மரத்திற்கும், வெங்கடேஷ் அய்யர் தலைமையில், பல்வேறு அபிஷேகங்களை செய்தனர். பின் அரச மரத்திற்கு வேட்டி, துண்டு அணிவித்து ஆணாகவும், வேப்ப மரத்திற்கு புடவை அணிவித்து பெண்ணாகவும் தயார்படுத்தினர். பின் வேப்ப மரத்திற்கு தாலி அணிவித்து திருமணம் விழா நடத்தினர். இதில் 33,500 ரூபாய் மொய் பணம் வசூலானது.