கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: சுவாமி வீதி உலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2016 11:02
திண்டுக்கல்: வை முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடந்தது. இன்று அம்மன் அலங்கார வீதியுலா நடக்க உள்ளது. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா பூத்தப் பூ அலங்கார சிறப்பு பூஜையுடன் பிப்., 4ல் துவங்கியது. பிப்., 5ல் பூச்சொரிதல் விழாவில், வீதியுலா வந்த அம்மனை, பலஆயிரம் பக்தர்கள் விதவிதமான பூக்களை படைத்து வழிபட்டனர். பிப்., 6ல் பாலாபிஷேக சிறப்பு பூஜைகள் நடந்தன. பிப்.,7ல் சுவாமி சாட்டுதல் விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து பிப்.,8ல் தூப தீப அலங்காரத்தில் அம்மனை மக்கள் வழிபட்டனர். நேற்று காலை திருமாங்கல்ய பூஜை, மஞ்சள் புடவை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு பாலகொம்பு ஊன்றி விழா துவக்க பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில், கோட்டை மாரியம்மன் திருவிழா கொடியேற்றம் நடந்தது. இரவு சுவாமி மாட வீதிகளில் வலம் வந்து பென்ஷனர் தெரு வழியாக கோயிலை அடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.