Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: ... சப்தாவர்ணத்தில் திருவல்லிகேனி பார்த்தசாரதி பெருமாள் அருள்பாலிப்பு! சப்தாவர்ணத்தில் திருவல்லிகேனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்.,13 ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்.,13 ல் துவக்கம்!

பதிவு செய்த நாள்

10 பிப்
2016
11:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மாசித்திருவிழா பிப்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.பிப்.,22 ல் தேரோட்டம் நடக்கிறது.முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளது. இங்கு ஆவணி, மாசித்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தாண்டு மாசித்திருவிழா பிப்., 13 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 5.30 க்கு கோயில் கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குகிறது. மாலையில் அப்பர் சுவாமி தங்கசப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வருகிறார். இரவில் ஸ்ரீபெலி நாயகர், அஸ்திரதேவர் தங்கப்பல்லக்கில் எழுந்தருளி திருவீதியுலா வருகின்றனர். பிப்.,17 ல் மேலக்கோயிலில் இரவு 7.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு குடவருவாயில் தீபாரதனை நடக்கிறது. பிப்.,18 ல் கோரதம், காலை 9 மணிக்கு ஆறுமுகப்பெருமான் வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா, இரவு உருகு சட்ட சேவை நிகழ்ச்சியும் நடக்கிறது.தங்கசப்பரத்தில் சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.பிப்., 20 ல் அதிகாலை பெரிய வெள்ளி சப்பரத்தில் சுவாமி வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காட்சியளிக்கிறார். பகல் 11 மணிக்கு பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு சுவாமி காட்சியளிக்கிறார். பிப்., 22 ல் காலை 6.30 மணிக்கு தேரோட்டம் ரத வீதிகள் வழியாக உலா வருகிறது. மாலை தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar