நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணு கோபால சுவாமி கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் தீபாராதனை நடந்தது. பாமா ரு க்குமணி சமேதராய் வேணுகோபால சுவாமி ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.