ராமநாதபுரம் கூரி சாத்த அய்யனார் கோயிலில் பிப்.12ல் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2016 02:02
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மூலக்கொத்தளம் கூரி சாத்த அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் பிப்.12ல் நடக்கிறது. இக்கோயில் திருப்பணிகள் சில மாதங்களாக நடந்தன. இன்று (பிப்.10) காலை 5மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இரவு 8மணி முதல் யாக வேள்வி துவங்குகிறது. பிப்.11 காலை 9 மணிக்கு இரண்டாம் யாக வேள்வி, மாலை 5மணிக்கு மூன்றாம் யாக பூஜை நடக்கிறது. பிப்.12 காலை 6 மணிக்கு 4ம் யாக வேள்வி, கஜ, லெட்சுமி பூஜைகள் மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 9 மணிக்கு கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வருகின்றன. தொடர்ந்து கோபுர கலசத்தின் மீது புனித நீர் <ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.