பதிவு செய்த நாள்
10
பிப்
2016
03:02
உறுதியான உள்ளம் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
சூரியனால் நினைத்தது நிறைவேறும். புதன் பிப். 25க்கு பிறகு சாதகமாக வந்து நற்பலன் கொடுப்பார். செவ்வாய் பிப். 27வரையும், சுக்கிரன் மார்ச் 8 வரையும் நன்மை தருவார்கள். மற்ற கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருந்தாலும், பொருளாதார வளத்தில் குறை இருக்காது. அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் வசதிகள் பெருகும். ஆனந்தம் அதிகரிக்கும். சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். சிலர் குழந்தை பாக்கியம் பெறலாம்.பிப்ரவரி 20,21ல் புத்தாடை, நகை வாங்கலாம்.
தொழிலதிபர்கள், வியாபாரிகளுக்கு லாபம் கூடும். பிப். 27,28,29ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். போட்டியாளர்கள் வகையில் தொல்லை வரும். ஆனாலும் சமாளித்து விடுவீர்கள்.
பணியாளர்கள் அதிகமாக போராடியே கோரிக்கைகளை பெற முடியும். வேலைப்பளு அலைச்சல் குறையும். இடமாற்ற பீதி இருக்காது. பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மார்ச் 8,9ல் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம், புகழ், பாராட்டு கிடைக்கும். மார்ச் 8க்கு பிறகு போட்டி அதிகம் இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
மாணவர்கள் ஆரம்பத்தில் சற்று பின்தங்கினாலும், புதனால் பிப்ரவரி 25க்கு பிறகு நல்ல வளர்ச்சியை காணலாம். பெற்றோரிடம் நற்பெயர் எடுப்பர்.
விவசாயிகளுக்கு பழ வகை, காய்கறி, கீரை, பயறு போன்ற பயிர்களில் நல்ல வருமானம் இருக்கும். புதிய சொத்து பிப். 27க்குள் வாங்கலாம். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் அக்கம் பக்கத்தினருடன் அனுசரணை யுடன் இருப்பர். அபார ஆற்றல் பிறக்கும். வேலை பார்க்கும் பெண்கள் உயர் பதவியை அடைய வாய்ப்பு இருக்கிறது. கையில் பணம் தாராளமாக புழங்கும்.
நல்ல நாள்: பிப்.13,16,17,20,21,27,28,29, மார்ச் 1,2,8,9,10,11.
கவன நாள் : மார்ச் 3,4 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: செந்துõரம்,வெள்ளை, பச்சை,
பரிகாரம்: பெருமாள், சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.