பதிவு செய்த நாள்
11
பிப்
2016
11:02
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோவிலை சுற்றி, மலர்களாலான பச்சை வண்ண சுவர் அமைக்க, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருமலையில், கடந்த வைகுண்ட ஏகாதசி அன்று, ஏழுமலையான் கோவில் முன்புறம், சுற்றுச் சுவரை ஒட்டி பல வகை செடி, மலர்களால் செய்யப்பட்ட அலங்காரச் சுவரை, தேவஸ்தானம் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து பிப்., 14ல் ரதசப்தமி அன்று, கோவில் மாடவீதியை சுற்றி, அலங்காரச் சுவர் அமைக்க தேவஸ்தானம் முடிவு செய்துஉள்ளது.இதற்காக, மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் இருந்து, நிபுணர்கள் அழைக்கப்பட உள்ளனர்.