பழநி மாரியம்மன்கோயிலில் திருக்கம்பம் சாட்டும் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2016 11:02
பழநி: பழநி மாரியம்மன்கோயில் மாசித்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டுதல் நேற்று நடந்தது.
பழநி கோயில் நிர்வாகத்திற்குட்பட்ட மாரியம்மன்கோயிலில் பிப்.,5 முதல் 25 வரை இவ்விழா நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கம்பம் சாட்டும் நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் திருக்கம்பத்திற்கு காணியாளரால் அரிவாள் எடுத்து கொடுக்கப்பட்டது. காணியாளக் கவுண்டருக்கும் மரியாதை செய்து நேற்று அதிகாலை 6 மணிக்கு திருக்கம்பம் அலங்கரிக்கப்பட்டது.
சிறப்பு பூஜைக்குபின் கோயில் முன்பகுதியில் 8:30 மணிக்கு நடப்பட்டது. திருக்கம்பத்திற்கு பால், தீர்த்தம் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். பிப்., 23ல் திருக்கல்யாணம் நடைபெறும். அம்மன் தங்க குதிரை வாகனத்தில் உலா வந்து அருள்பாலிப்பார். பிப்.,24ல் தேரோட்டம் நடக்கிறது. பிப்.,22 முதல் 24 வரை பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் மாலையில் பக்திசொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பழநிகோயில் இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா செய்கின்றனர்.