திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் மாசி விழா தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2016 11:02
துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா தேரோட்டம் நேற்று காலை நடந்தது.
திருச்செந்துார் முருகன் கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா பிப்.,2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் அம்மன் காலை, மாலை பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார். 10 ம் நாளான நேற்று காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 4 மணிக்கு தேரில் அம்பாள் எழுந்தருளினார். சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. 5.30 மணிக்கு தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர். கீழ ரத வீதி வழியாக தெற்கு, மேல, வடக்கு ரத வீதி வழியாக காலை 6.15 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர் வரதராஜன் உட்பட அதிகாரிகள் செய்திருந்தனர்.