விக்கிரவாண்டி: பாப்பனப்பட்டில் விநாயகர், செல்வ முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டில் விநாயகர், செல்வ முத்து மாரியம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டது. அதன் கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு, இரண்டாம் கால யாக சாலை பூஜை முடிந்து, 10:15 மணியளவில் சந்திர சேகர குருக்கள் தலைமையில், கலச புறப்பாடு நடந்து, 10:30 மணியளவில் விநாயகர், செல்வ முத்துமாரியம்மன் கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினர் . யாகசாலை பூஜைகளை விக்கிரவாண்டி சந்திரசேகர குருக்கள் செய்திருந்தார். ஊராட்சி தலைவர் பாக்கியலட்சுமி பெரியசாமி தலைமையில், திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.