பதிவு செய்த நாள்
12
பிப்
2016
12:02
ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே ஜடாமகுட தீர்த்த கோயிலில் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உழவாரப் பணிகள் மூலம் குப்பைகளை அகற்றினர்.
தனுஷ்கோடி அருகே அமைந்துள்ள ஜடாமகுட தீர்த்த கோயிலில் பிப்., 22ல் மகாமகம் விழா நடக்கிறது. இதில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதையடுத்து கோவிலை சுற்றி அடர்ந்து வளந்திருந்த முள்செடிகள், புதர்களை கோயில் நிர்வாகத்தினர் அகற்றினர். இதனை தொடர்ந்து நேற்று அரசு பள்ளி, பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி, வேர்க்கோடு ஜோசப் பள்ளிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., மாணவ, மாணவிகள், நகராட்சி துப்புரவு பணியாளர்கள், விவேகானந்தா கேந்திர சேவகர்கள் இணைந்து உழவாரப் பணிகள் மூலம் குப்பைகளை அகற்றினர். நகராட்சி சுகாதார அலுவலர் அய்யப்பன், என்.எஸ்.எஸ்., ஆசிரியர்கள் ஜெயகாந்தன், பழனிச்சாமி, நீலாவேலு, கோபிலட்சுமி, அந்தோணிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.