Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாமகம் செல்வோர் கவனத்திற்கு!
முதல் பக்கம் » கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 »
மகாமக நாளில் நீராடும் முறை!
எழுத்தின் அளவு:
மகாமக நாளில் நீராடும் முறை!

பதிவு செய்த நாள்

12 பிப்
2016
02:02

மகாமக யாத்திரை கிளம்பும்போதே ஏழை ஒருவருக்கு அன்னதானம் இட்டு அந்த நிறைவோடு கிளம்புவது நல்லது. திருக்குளத்தில் நீராடுவதற்கு முதல் நாளே திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், கருப்பூர், தாராசுரம், சுவாமிமலை, முதலிய பஞ்ச குரோசத்தலங்களுக்குச் சென்று முறையாக வழிபடுதல் வேண்டும். மகாமக நாளில் நாம் விழித்து எழும்போதே, கும்பேசுவரரை மனதளவில் பிரார்த்தித்து வருதல் வேண்டும். நல்ல நேரம் பார்த்து துணிமணிகள் களையாமல் சுவாமியை நோக்கி குளத்திலே மூழ்க வேண்டும். மூழ்கி எழும் நேரத்தில் இறைவனைத் துதி பாடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையிலும் மனம் ஒப்பக்கூடாது.

குளத்தில் மூழ்கி எழுந்து நீராடலின் பலனை நிறைவாகப் பெற தீர்த்தக் கிணறுகளை நோக்கியும் கைகூப்பி வணங்க வேண்டும். முறையாக நீராடி தீர்த்தம் பெற்று அடுத்தபடியாய் பொற்றாமரைக் குளத்தை நோக்கி நடக்க வேண்டும். அப்போது, நாகேஸ்வரரையும், சோமேஸ்வரரையும் மனதளவில் பிரார்த்தித்தபடியே செல்ல வேண்டும். பொற்றாமரைக் குளத்தில் சுவாமி இருக்கும் திசையை நோக்கி முறையாக மூழ்கி எழ வேண்டும். எந்தக் குளத்திலுமே ஒருமுறை மூழ்கி எழுவதே போதுமானது, மூன்று முறையும் மூழ்கி எழலாம். பொற்றாமரைக் குள நீராடல் முடிந்து காவிரிக் கரை நோக்கி நடக்க வேண்டும். உடம்பிலுள்ள ஈரம் வடிய வடிய ஒட்டுமொத்த பாவங்களும் வடிவதாக உளமுருக எண்ணிடுதல் வேண்டும். காவிரியில் மூன்று முறை மூழ்கி எழுவது நல்லது. மூழ்கி எழும் ஈரத்துடனேயே பெருமாள் கோயில்களின் தீர்த்தங்களைப் பெற்று வழிபட வேண்டும். ஒட்டுமொத்தப் பாவங்களும் நீங்கிட, இதுபோல் மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம் மற்றும் காவிரி ஆகிய மூன்று நீர் நிலைகளிலும் முறையாக நீராடுதல் வேண்டும்.

 
மேலும் கும்பகோணம் மகா மகபெருவிழா - 2016 தகவல்கள் »
temple news
குரு பகவான் சிம்மராசியில் பிரவேசிக்கும் போது வரும் மாசி மாதத்து மகம் நட்சத்திரமே, மகாமக தினமாகக் ... மேலும்
 
temple news
சில குறிப்பிட்ட பாவங்கள் மட்டுமே கங்கை, யமுனை, நர்மதை , இன்னும் புண்ணிய க்ஷேத்திரங்களிலுள்ள பலவகை ... மேலும்
 
temple news
மகாமக குளம் உருவாகக் காரணமாக அமைந்த தலம் கும்பகோணம் பாணபுரீஸ்வரர் கோவில். கும்பகோணம் பாணாத்துறையில் ... மேலும்
 
temple news
கும்பகோணத்திற்கு காவிரி நதி வருவதற்கு காரணமாக இருந் தவர் யார் தெரியுமா? ஹேரண் டகர் என்னும் மகரிஷி தான். ... மேலும்
 
temple news
கும்பகோணம் மகாமகக்குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar