பதிவு செய்த நாள்
13
பிப்
2016
12:02
தஞ்சாவூர்: கும்பகோணம், ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா, இன்று வேதமந்திரம் முழங்க கோலாகலமாக தொடங்கியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் வலம் வந்து கொடி மரத்தின் முன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான, தீர்த்தவாரி நிகழ்ச்சி, 22ம் தேதி நடைபெறும். குளத்தின் கிழக்கு பகுதியில் இறங்கி குளித்து, மேற்கு பகுதியின் வழியாக மேலே ஏறி செல்ல வேண்டும். மகாமக குளத்தில், 14ம் தேதி முதல், 22ம் தேதி வரை, காலை 6:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை, புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
அமிர்த நீர் கலப்பு: மகாமகப் பெருவிழாவின் நாயகனாக ஆதிகும்பேஸ்வரர் கோவிலில், பூர்வாங்க பூஜைகளுடன், மகாருத்ர யாகங்கள் செய்தனர். ஆலயத்திலிருந்து எடுத்து வரப்பட்ட அமிர்த கலச புனிதநீரை கலந்து, மகாமக குளத்தை புனிதப் படுத்தினர். அதை தொடர்ந்து, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் புதிதாக வடிவமைக்கப்பட்டிருந்த விநாயகர், சுப்ரமணியர் திருத்தேர்களின் வெள்ளோட்டம், நேற்று நடைபெற்றது.
கோட்டையில் ஜெ., ஆய்வு: மகாமகத்தில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதுகுறித்து ஆய்வு செய்ய, முதல்வர் ஜெயலலிதா தலைமையில், நேற்று தலைமை செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், வேலுமணி, தலைமைச் செயலர் ஞானதேசிகன், போலீஸ் டி.ஜி.பி., அசோக்குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பனீந்திர ரெட்டி கலந்து கொண்டனர்.
மகாமகம் விழாவிற்காக, 30 அவசர கால ஆம்புலன்ஸ் வாகனங்களும், ஐந்து பைக்
ஆம்புலன்சுகளும், 180 ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர். பிப்., 23 வரை, சிறப்பு சேவை
தொடரும்.– பிரபுதாஸ் 108 ஆம்புலன்ஸ் சேவை விழிப்புணர்வு மேலாளர்