பதிவு செய்த நாள்
13
பிப்
2016
02:02
வடிவீஸ்வரம்: நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோவில் மாசித் திருவிழா 13ம் தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் பத்துநாள் நடக்கிறது.
13, 14ம் தேதிகளில், சுவாமி, அம்மன் புஷ்பக விமானத்தில் பவனி வருகின்றனர். பிப்.15 காலை 6 மணிக்கும், இரவு 10 மணிக்கும் சுவாமி, அம்மன் பூத வாகனபவனி, பிப்.16 காலை 6 மணிக்கும், இரவு 9 மணிக்கும் சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகன பவனி, பிப்.17 காலை 5மணிக்கும் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் காமதேனு வாகனத்திலும், இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் இந்திர வாகனத்திலும் பவனி வருகின்றனர்.
பிப்.18ல் காலை 6 மணிக்கு சுவாமி புஷ்பக விமானத்திலும், அம்மன் அன்ன வாகன பவனி, இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் யானை வாகன பவனி, பிப்.19ல் காலை 5மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருகின்றனர். அன்று காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. இரவு 9 மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி கைலாச பர்வத வாகன பவனி வருவர்.
பிப்.20ல் காலை 5 மணிக்கு சிதம்பரேஸ்வரர் பச்சை சாத்தி பவனி, மாலை 4மணிக்கு சுப்பிரமணியர் வெள்ளிக் குதிரையில் பவனி வருவர். பிப்.21 காலை 8 மணிக்கு திருத்தேர், இரவு 9மணிக்கு சுவாமி, அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் சப்தாவர்ணம் நடக்கிறது. பிப். 22 மாலை 4மணிக்கு ரிஷபவாகனத்தில் சுவாமி ஆராட்டுத்துறைக்கு எழுந்தருளுகிறார், இரவு 7.30 மணிக்கு சுவாமி, அம்மன் ஆராட்டுத்துறையில் இருந்து பவனி வருதல் நடக்கிறது.
தினமும் இரவில் தினமலர் டி.வி.ராமசுப்பையர் கலையரங்கத்தில் இசைக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி நடக்கிறது.