பதிவு செய்த நாள்
14
பிப்
2016
11:02
கும்பகோணம்: கும்பகோணம் மகாமத்திற்கான வைணவ கோயில்களில் வெகு விமர்சையாக கொடியேற்றம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக விழா நேற்றுமதியம் 12.மணிக்கு மேல் மகாமத்திற்கான 6 சைவ கோயில்களில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதன்பிறகு,பல்வேறு மடாதிபதிகள், துறவிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் புனித நீராடி சென்றனர். விழாவின், இரண்டாவது நாளான இன்று காலை, மகாமகத்திற்கு உகுந்த வைணவ கோயிலான சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ராஜகோபால்சுவாமி, ஆதிவராக பெருமாள் ஆகிய 5 கோயில்களில் ஒரே நேரத்தில்,இன்று காலை 8.45 மணிக்கு மேல், கொடிமரத்திற்கு பல்வேறு பூஜை பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான 22ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது 12 சிவதலங்களில் இருந்து சுவாமிகள் மகாமகக் குளக்கரையில் எழுந்தருளும்.இதைபோல், ஐந்து வைணவ கோயில்களில் இருந்து சுவாமிகள் காவிரி கரையில் எழுந்தருளும், பக்தர்கள் மகாமகக்குளம் மற்றும் காவேரி ஆற்றில் புனித நீராடுவர்கள்.