பதிவு செய்த நாள்
19
பிப்
2016
10:02
விருத்தாசலம்: மாசி மகப் பெருவிழாவில் விபச்சித்து முனிவருக்கு, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியே ற்றத்துடன் துவங்கியது. தினமும் விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூ ர்த்திகள் அலங்கரத்தில் வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். ஆறாம் நாள் உற்சவமான நேற்று பெரிய நாயகர், பெரியநாயகி, இளைய நாயகி மற்றும் பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு நேற்று காலை 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பகல் 11:45 மணியளவில் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், பாலாம்பிகை, விருத்தாம்பிகை, விருத்தகிரீஸ்வரர் சுவாமிகள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, விபசித்து முனிவருக்கு காட்சிளித்தார். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். பின்னர், பஞ்ச மூர்த்திகள், விபச்சித்து முனிவர் உள்ளிட்ட சுவாமிகள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து, சன்னதி வீதி, தென்கோட்டை வீதி, வட கோட்டை வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, இன்று (19ம் தேதி) மீண்டும் சன்னதி திரும்புகின்றனர்.