பதிவு செய்த நாள்
20
பிப்
2016
12:02
கடம்பத்துார்: கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், பிப்.,19, மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கடம்பத்துார் திரவுபதி அம்மன் கோவிலில், பிப்.,19, காலை மகா கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக, கடந்த, 17ம் தேதி காலை, கணபதி ஹோமமும், மாலை வாஸ்து சாந்தியும், முதல் கால யாகசாலை பூஜையும் நடந்தன. பிப்.,19, முன்தினம் காலை, இண்டாம் கால யாகசாலை பூஜையும், புதிய பிம்பங்களுக்கு அஷ்டதிசை கிரியையும், மாலை மூன்றாம் கால யாகசாலை பூஜையும், நாடி சந்தானமும் நடந்தன. பிப்.,19, காலை 5:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 7:45 மணிக்கு, கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகமும் நடந்தன. காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தன. அதைத் தொடர்ந்து, மாலை திருக்கல்யாணமும், இரவு அம்மன் திருவீதி உலாவும் நடந்தன. விழாவில் கடம்பத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.