பதிவு செய்த நாள்
20
பிப்
2016
12:02
மாமல்லபுரம்: திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில் பிப்.,19ல் தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது.
திருப்போரூர், கந்தசுவாமி கோவிலில், கடந்த 13ம் தேதி, கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை, உற்சவங்கள் நடைபெற்றன. ஏழாம் நாள் உற்சவமான தேர் உற்சவம், பிப்.,19ல் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, காலையில், கோவில் வழிபாட்டைத் தொடர்ந்து, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முருகர், வள்ளி, தெய்வானையுடன், காலை 7:00 மணிக்கு, தேரில் எழுந்தருளினார். சிறப்பு வழிபாட்டைத் தொடர்ந்து, அலங்கார தேர், காலை 8:00 மணிக்கு புறப்பட, பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாடவீதிகள் வழியே உலா சென்ற சுவாமியை, பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர். வீதியுலாவிற்கு பின், பகல் 1:00 மணிக்கு, தேர் நிலையை வந்தடைந்தது.