மீஞ்சூர் ஏகாம்பரநாதர் கோவிலில் ராஜகோபுர பணிகள் விறுவிறு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2016 01:02
மீஞ்சூர்: மீஞ்சூர், ஏகாம்பரநாதர் கோவிலில், ராஜகோபுர பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், மே மாதம் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
வடகாஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூர், காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரநாதர் கோவிலில், 2008ம் ஆண்டு, ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன. ஐந்து நிலைகள் கொண்ட ராஜகோபுரம், 65 அடி உயரத்தில் அமைகிறது. கோபுரத்தில், 22 அடி உயரத்திற்கு கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. தனியார் பங்களிப்பில் நடைபெற்று வரும் பணிகள், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.