மேலுார்: மேலுாரில் சிவன் கோயில் பின்புறமுள்ள காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்., 18ல் யாகசாலை பூஜையோடு துவங்கியது. பிப்.,19 காலை சிவாச்சார்யார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா கும்பத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.