தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 22 விமானங்களுக்கு பாலாலயம் பூஜை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20பிப் 2016 04:02
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி 3வது கட்டமாக ஸ்வாமி விமானம் உள்பட 22 சன்னதி விமானங்களுக்கு சிறப்பு யாகம் மற்றும் பாலாலயம் பூஜைகள் நடந்தன.
பாலாலயம் பூஜை செய்து புனித நீரை அத்திபலகைகளுக்கு சிவச்சாரியார்கள் அபிஷேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.