பதிவு செய்த நாள்
12
மார்
2016
11:03
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், புஷ்பவல்லி சமேத அஷ்டபுஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், 12 ஆண்டுகளுக்கு முன் கும்பாபிஷேகம் நடந்தது. இதனால், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்து, நேற்று காலை, 7:00 மணியளவில், அதற்கான பாலாலயம் நடந்தது. புஷ்பவல்லி தாயார், பெருமாள் விமானம், ÷ மல்தளம், ராஜகோபுரம், வெளிப்புற தரைதளம் போன்ற பணிகள், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் நடக்க இருக்கின்றன. இந்த பணிகளை ஆறு மாதத்திற்குள் முடித்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, கோவில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.