பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
02:04
உங்களுக்கு இந்த மாதம் நல்ல வளர்ச்சிக்காலமாக அமையும். சூரியனும், புதனும் 10-ம் வீட்டில் சாதகமான இடத்தில் இருக்கின்றனர். அதோடு 2-ம் இடத்தில் உள்ள குரு நற்பலன் கொடுப்பார். ஏப். 26 வரை சுக்கிரனும் நன்மை அளிப்பார். வருமானம் அதிகரிக்கும். எதிரியும் சரணடையும் சூழ்நிலை உருவாகும். சூரியனால் முக்கிய பணிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பணப் புழக்கத்திற்கு குறைவிருக்காது. சமூக அந்தஸ்து உயரும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். புதனால் பெண்களின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேரும். வீட்டில் இருந்த சண்டை சச்சரவு அடியோடு நீங்கும். சகோதரிகள் அனுகூலமாக இருப்பர். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
தொழில், வியாபாரம் முதலியவை முன்னேற்ற பாதையில் இருக்கும். துணிச்சலுடன் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் இடையூறு நீங்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். கூட்டு தொழில் நல்ல வளர்ச்சியை அடையும். பணியாளர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். மே 5,6,7ல் எதிர்பாராத நன்மையான சம்பவம் நடக்கும். வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்று சேருவர். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். தனியார் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். நெருப்பு தொடர்பான பணியில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வர். ஏப். 25க்கு பிறகு எதிரியால் தொல்லை ஏற்படலாம். அரசியல்வாதிகள் சமூக சேவகர்கள் நற்பெயர் எடுப்பர். மாணவர்கள் முன்னேற்றத்தை தொடர்ந்து காணலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். தேர்வு நல்ல முறையில் எழுதுவர். போட்டி, பந்தயத்தில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும். பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் சிந்தித்து செயல்படுவது நல்லது.
பெண்கள் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் காண்பர். சுய தொழில் செய்யும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
நல்ல நாள்: ஏப்.15,16,19,20,21,27,28,29,30, மே 5,6,7,8,9,12,13
கவன நாள்: மே 1,2 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டம் எண்- 5,9 நிறம் செந்துõரம், பச்சை
பரிகாரம்: செவ்வாயன்று முருகனை வழிபட்டால் பிள்ளைகள் நலம் பெறுவர். சனிக்கிழமை சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபமிட்டு வழிபடுங்கள். ஏப். 25க்கு பிறகு வெள்ளிக்கிழமை அம்மனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.