பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
03:04
புதனால் மாதம் முழுவதும் நன்மை தொடரும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார வளம் மேம்படும். கேது, சனியால் கிடைத்த நற்பலன் தொடரும். பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை இருக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஏப். 19,20,21ல் விருந்து விழா என செல்வீர்கள்.
உடல்நலம் சிறப்பான நிலையில் இருக்கும். . பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
வியாபாரம் வருவாய் அதிகரிக்கும். பணவிரயம் அகலும். லாபம் சிறப்பா இருக்கும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். ஏப்ரல் 25-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். ஆனால் சூரியன் சாதமற்ற நிலைக்கு செல்வதால் அரசு வகையில் அனுகூலம் இல்லை.எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். மே 1,2 ல் எதிர்பாராத வகையில் பணவரவு காணலாம். பணியாளர்கள் சிறப்பான பலனைக் காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றம் அடைவர். ஆனால் அரசு ஊழியர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. ஏப். 25 க்கு பிறகு சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பதில் தாமதம் ஆகலாம். ஏப். 25க்கு பிறகு புதிய ஒப்பந்தம் எளிதாக கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவி பெற வாய்ப்புண்டு. மாணவர்கள் புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர்களின் அறிவுரை வளர்ச்சிக்கு கைகொடுக்கும்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். எள், கரும்பு, கோதுமை, பழவகை பயிர்கள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூல் பெறுவர். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரம் சாதகமாக அமையும்.
பெண்கள் வாழ்வில் முன்னேற்றம் காணலாம். குழந்தைகளால் பெருமை உண்டாகும். .மே 3,4,5ம் தேதிகள் சிறப்பாக அமையும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிடைக்கும்.
நல்ல நாள்: ஏப். 14,15,16,19,20,21,24,25,26,மே 1,2,3,4,10,11,12,13
கவன நாள்: மே 5,6,7 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 3,5 நிறம்: பச்சை, சிவப்பு.
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை வழிபடுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏப்ரல் 25-ந் தேதி வரை தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். வெள்ளியன்று காயத்ரி தேவியை வணங்குவது நல்லது.