பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
03:04
சூரியன், புதன் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பர். சுக்கிரன் ஏப். 25 வரை சாதகமான இடத்தில் இருப்பார். பகைவரை வெல்லும் ஆற்றல் உண்டாகும். புதிய முயற்சி வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடைபெறும். மாதத் தொடக்கத்தில் சுக்கிரனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். ஏப். 24,25,26 ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். ஏப்.19,20,21ல் உறவினர் வருகையால் நன்மை உண்டாகும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஏப்.14, மே 10,11 ல் வீண் விவாதங்களை தவிர்த்து வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
தொழில், வியாபாரத்தில் சூரியனின் பலத்தால் பொருளாதார வளம் சிறக்கும். எந்த துறையிலும் ஈடுபட்டாலும் அபார துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சுக்கிரன் சாதகமான நிலையில் இருப்பதால் சிறப்பான பலன்களை காணலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். மே 5,6,7ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சகபெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு செவ்வாயால் சில தடைகள் ஏற்படலாம்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் கிடைக்கும். ஏப். 25 க்கு பிறகு முயற்சியில் தடையும், மனதில் சோர்வும் உண்டாகும். அரசியல்வாதிகள் நற்பலன் காண்பர். மாணவர்கள் கல்வி வளம் பெறுவர். ஆசிரியர்களிடம் நற்பெயர் கிடைக்கும். போட்டி பந்தயத்தில் ஈடுபட்டு வெற்றி பெறுவர். விவசாயயப்பணி சீராக நடந்தேறும். உழைப்புக்கு தகுந்த வருமானம் கிடைக்கும்.வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்.
பெண்கள் குடும்பத்தாரிடம் நற்பெயர் பெறுவர். ஏப். 29,30ல் பிறந்த வீட்டில் இருந்து சீதனம் வந்து சேரும். மே 8,9 ல் விருந்து விழா என செல்வீர்கள். சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர்.
நல்ல நாள்: ஏப். 17,18,19,20,21,24,25,26,29,30, மே 5,6,7,8,9
கவன நாள்: மே 8,9 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டம் எண்: 3,7 நிறம்- செந்தூரம், பச்சை.
வழிபாடு: சனியன்று சனீஸ்வரருக்கு அர்ச்சனை செய்யுங்கள். வியாழனன்று தட்சிணாமூர்த்தியை கொண்டைக்கடலை மாலை சாத்தி வணங்குங்கள். ஏப். 25 க்குப் பிறகு தினமும் லட்சுமிதாயாரை வழிபடுங்கள்.