பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
03:04
சுக்கிரன்,குரு,கேது ஆகிய கிரகங்களால் சாதக பலன் தொடரும். பொருளாதாரமும், மக்கள் மத்தியில் செல்வாக்கும் உயரும். கடவுனிள் கருணையால் நன்மை அதிகரிக்கும். குருவால் மனதில் மகிழ்ச்சி நிலைக்கும். உற்சாகமுடன் பணியில் ஈடுபடுவீர்கள். நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியர் இடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்களிடம் கருத்துவேறுபாடு நீங்கும். ஏப். 25க்கு பிறகு பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
பெண்கள் அனுகூலமாக இருப்பர். குறிப்பாக ஏப். 27,28ல் அவர்களால் முன்னேற்றம் காணலாம். உடல்நிலை சுமாராக இருக்கும். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். அதிக முதலீடு செய்ய வேண்டாம். பகைவரால் இடையூறு ஏற்பட வாய்ப்புண்டு. புதனால் அலைச்சல் அதிகரிக்கும். சிலர் தொழில் ரீதியாக குடும்பத்தை விட்டு பிரியும் சூழல் உருவாகலாம். மே 8,9 ல் எதிர்பாராத வகையில் பண லாபம் கிடைக்கும்.
பணியாளர்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.சிலர் வேலை நிமித்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்வர். எதிர்பார்ப்பு பெரும்பகுதி நிறைவேறும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு போன்றவை கிடைக்கும். பணப்புழக்த்தில் எந்த குறைவிருக்காது.அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க நேரிடும். மாணவர்களுக்கு புதன் சாதகமற்று இருப்பதால் அக்கறையுடன் படிப்பது அவசியம். விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைக் காண முடியாது. வழக்கு, விவகாரம் சுமாராக இருக்கும்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். தடைபட்ட திருமணம் நடக்க வாய்ப்புண்டு. ஏப். 22,23ல் தோழிகள் மிகவும் உதவிகரமாக இருப்பார்
நல்ல நாள்: ஏப். 14,19,20,21,22,23,27,28, மே1,2,8,9,10,11
கவன நாள்: ஏப்ரல் 15,16 மே 12,13 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்டம் எண்- 3,7 நிறம்: வெள்ளை, மஞ்சள்
வழிபாடு: பைரவருக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை, பைரவரை வழிபடுங்கள். ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது நல்லது. ஞாயிற்றுக் கிழமை சூரியனை வழிபட்டு ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள்.