Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை ... வாராரு... வாராரு... அழகர் வாராரு...: மதுரை வைகையில் இறங்கினார்! வாராரு... வாராரு... அழகர் வாராரு...: மதுரை ...
முதல் பக்கம் » மதுரை சித்திரை திருவிழா - 2016
அழகர்கோயில் சித்திரை திருவிழா: சுவாமி புறப்பாடுடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
அழகர்கோயில் சித்திரை திருவிழா: சுவாமி புறப்பாடுடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

19 ஏப்
2016
11:04

அழகர்கோவில்: மதுரை அழகர்கோவில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. நாளை அழகர் மலையில் இருந்து புறப்படும் கள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏப்.,22ல் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். ஏப்., 20ல் மாலை 5.00 மணிக்கு கண்டாங்கி பட்டு உடுத்தி, கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் சுவாமி புறப்படுகிறார். 18ம் படி கருப்பணசாமியிடம் அனுமதி பெற்று இரவு 7.00 மணிக்கு மதுரைக்கு புறப்படுகிறார். வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளுகிறார்.

ஏப்., 21ல் காலை 6.00 மணிக்கு மூன்றுமாவடியிலும், மாலை அவுட்போஸ்டிலும் எதிர்சேவை நடக்கிறது. இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலில் திருமஞ்சனம் நடக்கிறது. ஏப்.,22ல் அதிகாலை தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் காலை 6.00 மணிக்கு மேல் 7.00 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க வைகை ஆற்றில் இறங்குகிறார்.காலை 10.00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளும் கள்ளழகருக்கு பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலை சென்றடையும் கள்ளழகர், ஏப்.,23ல் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார். இரவு 8.00 மணிக்கு ராமராயர் மண்டபம் வந்தடைகிறார். அங்கு இரவு தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏப்.,24ல் காலை மோகனி அவதாரத்தில் புறப்படும் கள்ளழகர் அனந்தராயர் மண்டபத்தில் ராஜாங்க சேவையும், இரவு 2.00 மணிக்கு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கும் நடக்கிறது. அப்பன்திருப்பதி வழியாக ஏப்.,26ல் அழகர் மலையை அடைகிறார். முன்னதாக மதுரையில் கள்ளழகர் எழுந்தருளும் தங்க குதிரை, கருடாழ்வார், சேஷ வாகனங்கள் அழகர்கோயிலில் இருந்து நேற்று முன்தினம் மதுரைக்கு எடுத்து வரப்பட்டன. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி செல்லதுரை செய்து வருகின்றனர்.

 
மேலும் மதுரை சித்திரை திருவிழா - 2016 »
temple news
மதுரை சித்திரை திருவிழாவின் 10ம் நாளான ஏப்.19ல் மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
மதுரை:மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, அம்மனுக்கு ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவில் இன்று மீனாட்சியம்மன் இந்திரவிமான வாகனத்தில் திக்விஜயம் செய்கிறாள். பட்டம் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: கண்டாங்கிப் பட்டு உடுத்தி, கையில் நேரிக் கம்புடன் தங்கப் பல்லக்கில் அழகர் கோவிலிலிருந்து ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவில் இன்று சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் பவனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar