Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாகாளியம்மன் கோவிலில் தீ சட்டி ... திருத்தணி முருகன் அகூரில் வீதியுலா திருத்தணி முருகன் அகூரில் வீதியுலா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சின்னாளபட்டி சித்திரை திருவிழா: பூப்பல்லக்கு உற்சவத்துடன் நிறைவு!
எழுத்தின் அளவு:
சின்னாளபட்டி சித்திரை திருவிழா: பூப்பல்லக்கு உற்சவத்துடன் நிறைவு!

பதிவு செய்த நாள்

28 ஏப்
2016
11:04

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சித்திரை திருவிழா பூப்பல்லக்கு உற்சவத்துடன் நிறைவடைந்தது. சின்னாளபட்டி கீழக்கோட்டையில் ராம அழகர் சுவாமி தேவஸ்தானம் மற்றும் மேட்டுப்பட்டியில் சுந்தரராஜ பெருமாள் திருப்பணி நலச்சங்கம் சார்பில் சித்ரா பவுர்ணமி திருவிழாக்கள் நடந்தன. இதையொட்டி கடந்த ஏப்.7ல் இரு பகுதியிலும் கொடியேற்றம் நடந்தது. ஏப்.22ல் குதிரை வாகனத்தில் ஆரோகணித்து பச்சை பட்டுடுத்தி ராம அழகர் சுவாமி காந்திகிராமத்தில் உள்ள சஞ்சீவி ஆற்றிலும், சுந்தரராஜபெருமாள் சுவாமி சீவல்சரகில் உள்ள குடகனாற்றிலும் இறங்கினர். இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் நகர்வலம் சென்றனர். திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருளினர்.

பொதுமக்களின் அபிஷேக ஆராதனைகளை ஏற்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தினந்தோறும் இரவில் ராமஅழகர் சுவாமி கீழக்கோட்டை பொன்விழா மைதானத்தில் உள்ள காளைய கவுண்டர் வகையறா தசாவதார மண்டகப்படியில் தங்கினார். சுந்தரராஜ பெருமாள் சுவாமி மேட்டுப்பட்டி காந்திமைதானத்தில் உள்ள பிள்ளைமார் சமுதாய தசாவதார மண்டகப்படியில் தங்கினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலையில் கீழக்கோட்டையில் தெப்ப உற்சவமும், மேட்டுப்பட்டியில் ஊஞ்சல் உற்சவமும் நடந்தன. நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் நகர்வலம் வந்த ராம அழகர் சுவாமி பிருந்தாவன தோப்பில் உள்ள அழகர் கோயிலை அடைந்தார். சுந்தரராஜ பெருமாள் சுவாமி பூப்பல்லக்கில் நகர்வலம் வந்து மேட்டுப்பட்டியில் உள்ள சுந்தரராஜ பெருமாள் கோயிலை அடைந்தார். இருபகுதியிலும் நடந்த புட்டு திருவிழா நிகழ்வுடன் சித்திரை திருவிழாக்கள் நிறைவடைந்தன. கீழக்கோட்டை ராம அழகர் சுவாமி தேவஸ்தான கமிட்டி மற்றும் மேட்டுப்பட்டி சுந்தரராஜ பெருமாள் திருப்பணி நலச்சங்க நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூரில் மாரியம்மன் கோவிலில் பங்குனி தேர் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar