இருளில் முழ்கிய அக்னி தீர்த்த கடற்கரை: புனித நீராட பக்தர்கள் தயக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2016 11:04
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மின் விளக்குகள் எரியாததால் அப்பகுதி இருளில் மூழ்கி உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகள் தயங்குகின்றனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடியபின் கோயிலுக்குள் செல்வது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மின் விளக்குகள் இன்றி கடற்கரை பகுதி இருளில் மூழ்கி உள்ளதால் மாலை 6 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தயங்குகின்றனர். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திருடர்கள், சமூக விரோதிகள் கைவரிசை காட்டவும் வாய்ப்பு உள்ளது. சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நலனை கவனத்தில் கொண்டு அக்னி தீர்த்த கடற்கரையில் எரியாத மின் விளக்குகளை எரியவைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.