கடலுார்: கடலூர் புருகீஸ்பேட்டை வேத விநாயகர் கோவிலில் 21ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 25ம் தேதி ஆஞ்சநேயர் உருவம் கலந்த வடிவில் விநாயகர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை ஊர் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.