ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், ராமானுஜர் அவதார உற்சவம் நேற்று முன்தினம் இரவு முதல் துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், கடந்த, 10 தினங்களாக பிரம்மோற்சவம் நடந்தது. இதையடுத்து, ராமானுஜர் அவதார உற்சவம் நேற்று முன்தினம் இரவு மஞ்சப்ரவேசத்துடன் துவங்கியது. இதையடுத்து, நேற்று காலை தங்கப்பல்லக்கில் ராமானுஜர் வீதியுலா வந்தார். தொடர்ந்து, 11 நாள் நடைபெறும் ராமானுஜர் அவதார உற்சவத்தில், காலை, மாலையில் ராமானுஜர் பலவகை வாகனங்களில் வீதியுலா நடைபெறும். உற்சவத்தில், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும், 9ம் தேதி நடைபெறும்.