திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயிஅம்மன் கோயில் வசந்தப் பெருவிழா ஏப்.,28ல் கொடியேற்றித்துடன் துவங்கியது. தினமும் இரவில் சர்வ அலங்காரத்தில் அம்பாள் எழுந்தருளல், கோயில் திருக்குளம் வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 7 மணிக்கு பால்குட விழா, பாலாபிஷேகம், மே 6ல் மாலை அம்மனுக்கு அலங்காரத் தீபாரதனை நடக்கும். தொடர்ந்து முக்கிய வீதிகளில் அம்மன் ரத ஊர்வலம், மே7 ல் மாலையில் பொங்கல் விழா நடக்கும். ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழாக் குழுவினர் செய்திருந்தனர்.