காரைக்காலில் மாங்கனி திருவிழா முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2016 11:05
காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி திருவிழா முன்னிட்டு நேற்று பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் 63 நாயன்மார்களின் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில், ஆண்டுதோறும் காரைக்கால் அம்மையாரின் கணவனிடம் சிவபெருமாள் மாங்கனி கொடுத்து அனுப்பி அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவது, இதனால் காரைக்கால் அம்மையாரை பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வது, அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலை கீழாக கைகலால் நடந்து செல்வதையும் சித்தரித்து, ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. இந்தாண்டு வரும் ஜீன் 17ம் தேதி மாப்பிள்ளை அழைப்பு,18ம் தேதி பரமதத்தர் செட்டியார் காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம், 19ம் தேதி மாங்கனி திருவிழா நடைபெறுகிறது. இதையோட்டி நேற்று காலை 9.40 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தி, பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தனி அதிகாரி ஆசைத்தம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.