ஸ்ரீரங்கம் சென்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சீர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2016 11:05
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அவதார நட்சத்திரமான சித்திரை ரேவதி திருநாளை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சாற்றி கொடுத்த வஸ்திரம்,கிளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதையொட்டி கண்ணாடி மாளிகையில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு வஸ்திரம், கிளி சாற்றபட்டு, சிறப்பு பூஜைகள் நடத்திப்பட்டு, ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு செல்லபட்டது. தக்கார் ரவிச்சந்திரன், செயல்அலுவலர் ராமராஜா, வேதபிரான்பட்டர் அனந்தராமன், சுதர்சனன், ஸ்தானிகம் ரமேஷ் பங்கேற்றனர். நாளை ( மே 5) ஸ்ரீரங்கத்தில் நடக்கும் தேரோட்டத்தில், ஆண்டாள் சாற்றி கொடுத்த வஸ்திரங்களுடன் பக்தர்களுக்கு ரங்கநாதர் காட்சியளிக்கிறார்.