பேரையூர்: பேரையூர் அருகே சின்னக்கட்டளை சொர்ணமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா 5 நாட்கள் நடந்தன. நேற்றுமுன்தினம் பக்தர்கள் 21 அக்னிச் சட்டி எடுத்து வந்தனர். குழந்தையை தோளில் தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து கொண்டு அக்னிச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் பால்கோவா அலங்காரத்தில் அருள் பாலித்தார்.