ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவிலில் சாட்டையடித்து விநோத நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2016 11:05
நாமகிரிப்பேட்டை: ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவிலில், சாட்டையடி வாங்கி பக்தர்கள் விநோத நேர்த்திக்கடன் செலுத்தினர். நாமகிரிப்பேட்டை அடுத்த, ஒடுவன்குறிச்சி மாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை பக்தர்கள் கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டும் பூசாரி முன்பு வந்து கையை தூக்கி வரிசையாக நிற்கின்றனர். சாட்டையுடன் நிற்கும் பூசாரி அருள் வந்து பக்தர்களை சாட்டையால் அடித்தார். இன்று சித்திரை தேரோட்டம் நடக்கிறது.