பதிவு செய்த நாள்
04
மே
2016
12:05
ஆர்.கே.பேட்டை:கங்கையம்மன் ஜாத்திரையை ஒட்டி நேற்று, கூழ்வார்த்தல் மற்றும் பொன்னியம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, சந்திரவிலாசபுரம் கிராமத்தில், நேற்று, கங்கையம்மன் ஜாத்திரை திருவிழா நடந்தது. இதில், காலை 10:00 மணிக்கு, கங்கையம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில், கூழ் வார்க்கப்பட்டது. பின், பிற்பகல் 12:00 மணிக்கு, 108 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், திரளான பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்தனர். மாலை 6:00 மணிக்கு பொன்னியம்மன் கோவிலில், குத்துவிளக்கு பூஜை நடந்தது. இரவு 8:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளினார்.