பொள்ளாச்சி: பொள்ளாச்சி அன்னை கஸ்துாரி பாய் வீதி வெள்ளையம்மன், பொம்மியம்மன் உடனமர் மதுரைவீரன் சுவாமி கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோவிலில், 52ம் ஆண்டு உற்சவ திருவிழா கடந்த மாதம் 19ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம் மதுரைவீரன், பட்டத்தரசியம்மன் உற்சவ சிலை திருவீதி உலா மற்றும் அலகு குத்தி உருவாரம் வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாவிளக்கு, சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. இதில், வெள்ளையம்மன், பொம்மியம்மனுக்கு மதுரைவீரன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்தனர். இன்று அமுதப்பொங்கல் நிகழ்ச்சியும், நாளை மஞ்சள் நீராடுதல், 7ம் தேதி அபிேஷக பூஜைகளும்,9ம் தேதி மறு பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.