காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஹோமம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2016 12:05
காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது. காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் 19 ஆம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை சங்கல்பம், 8:00 மணிக்கு ஏகாதச ருத்ரகலச பூஜைகள் நடந்தது. 9:00 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், 10:00 மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனையும், 12:00 மணிக்கு மகா ஸ்தபன அபிஷேக மகா தீபராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதேஷ வழிபாடு, 5:30 மணிக்கு திரிசதி அர்ச்சனை, இரவு கயிலாசநாதர் சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாம பள்ளியறை வழிபாடு, சண்டிகேஸ்வரர் கால பைரவர் வழிபாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளைகோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.