காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் கயிலாசநாதர், சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் 19ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று முன்தி னம் கணபதி ஹோமத்து டன் துவங்கியது. அதைத்தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. விக்னேஷ்வர பூஜை சங்கல்பம், ஏகாதச ருத்ரகலச பூஜை, ஏகாதச ருத்ர பாராயணம், ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது. மகா ஸ்தாபன அபிஷேக மகா தீபராதனையும், பிரதேஷ வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, இரவு கயிலாசநாதர் சுந்தராம்பாள் திருக்கல்யா ணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் தலைமையிலான அதிகாரிகள் செய்திருந்தனர்.