வைகாசி விசாகத் திருவிழா: பழநியில் மே 15ல் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2016 12:05
பழநி: பழநியில் வைகாசி விசாகத் திருவிழா மே 15ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.வசந்த உற்சவ விழா என அழைக்கப்படும் பழநி வைகாசி விசாக திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் மே 15ல் காலை 11 மணிக்குமேல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கி மே 24 வரை தொடர்ந்து பத்துநாட்கள் நடைபெறும். விழாவின் ஆறாம் நாளான மே 20ல் மாலை 6.30 மணிக்குமேல் இரவு 7.30 மணிக்குள், முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி தங்க மயில், வெள்ளி காமதேனு, தங்ககுதிரை உள்ளிட்டவாகனங்களில் எழுந்தருளுகிறார், முக்கிய நிகழ்ச்சியாக ஏழாம்நாள் மே 21 வைகாசி விசாகத்தன்று மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். பெரியநாயகியம்மன் கோயில் தேர்நிலையிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பாடாகி நான்குரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இணைஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.