Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கலியுகத்தில் சுகம் பெற என்ன வழி? ராமநாம சங்கீர்த்தனம் செய்த சத்திரபதி சிவாஜி! ராமநாம சங்கீர்த்தனம் செய்த ...
முதல் பக்கம் » துளிகள்
மதுரையில் வாழ்ந்தாலே முக்தி என்பது ஏன் தெரியுமா ?
எழுத்தின் அளவு:
மதுரையில் வாழ்ந்தாலே முக்தி என்பது ஏன் தெரியுமா ?

பதிவு செய்த நாள்

06 மே
2016
01:05

எங்கும் நிரம்பிய பரம்பொருளாகிய சிவபெருமான் அருள் கொண்டு 64 திருவிளையாடல் செய்து சிவனின் திருப்பாதம் பட்ட புண்ணிய திருத்தலம் மதுரை. இது பூலோக சிவலோகம் என சிறப்பிக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பெருமை பெற்ற தலம் இது. விசேஷமான சிவத்தலங்கள் 68. இவற்றில் கைலாயம் முதலான 16 தலங்கள் மிகவும் சிறந்தவை. இந்தப் பதினாறில் காசி, காளஹஸ்தி, சிதம்பரம், மதுரை ஆகிய நான்கும் மிகமிக சிறந்தவை. காசிக்குப் போய் இறந்தால் மோட்சமும், காளஹஸ்தியில் பூஜை செய்தால் மோட்சமும், சிதம்பரத்தில் தரிசிக்க மோட்சமும், மதுரையில் வாழ்ந்தாலே மோட்ச கதி கிடைக்கும் என்றும் ஹாலாஸ்ய மஹாத்மியம் விளக்குகின்றது. இவ்வுண்மையை சிவபெருமான் பார்வதிதேவிக்கு கூறியதாகவும், அச்சமயம் அம்பிகையின் மடியில் அமர்ந்திருந்த முருகப்பெருமான் உலகமக்கள் உய்யும் பொருட்டு திருவுள்ளம் கொண்டு இவ்வுண்மையை அகத்தியர் வாயிலாக சங்கர சம்ஹிதையிலும், பரஞ்சோதி முனிவர் மூலம் திருவிளையாடல் புராணத்திலும் வெளியிட அருள் புரிந்ததாகவும் கூறுவர். இவற்றையெல்லாம் விட வைகை வெள்ளத்தை அடைக்க பிட்டுக்காக  மதுரை மண்ணை தனது திருமுடியில் சுமந்த பெருமை படைத்தது மதுரை. ஆக, சிவபெருமான் 64 திருவிளையாடல் புரிந்து மதுரை மண்ணில் தனது திருவடியை மதுரையில் பதித்தும், பிட்டுக்காக மதுரை மண்ணை தனது திருவடியில் சுமந்தும் உள்ளார்.  எனவே தான் இவ்வளவு பெருமை படைத்த மதுரை மண்ணில் வாழ்ந்தால் முக்தி என புராணங்கள் கூறுகின்றன.

 
மேலும் துளிகள் »
temple news
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். ... மேலும்
 
temple news
முருகனுக்குரிய விரதங்களில் பங்குனி உத்திரமும் ஒன்று. இந்நாள் சாஸ்தா, சிவன், விஷ்ணு ஆகிய ... மேலும்
 
temple news
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். இது ... மேலும்
 
temple news
பவுர்ணமியில் சந்திரன் 16 கலைகளுடன் பரிபூரணமாக பிரகாசிக்கும். இன்று கிரிவலம் சென்று வழிபட மனஅழுத்தம், ... மேலும்
 
temple news
இன்று பங்குனி பிரதோஷ விரதம். சிவனை வழிபட எல்லாம் நன்மையும் நடக்கும்.பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar