அய்யாவாடி பிரத்தியங்கிரா தேவி கோயிலில் நிகும்பலா யாகம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2016 04:05
மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோயில் உள்ளது. எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலின் தல விருட்சமானது ஐந்து வகையான இலைகளை கொண்டது.
இந்த கோயிலில் ராவணன் மகன் மேகநாதனும், பஞ்சபாண்டவர்களும் அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்களை பெற்றனர் என்பது ஐதீகம். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திபெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரணடைந்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும். சித்திரை மாத அமாவாசை •ßÛmk, காலை கோயில் மண்டபத்தில் அம்பாளை எழுந்தருள செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத தண்டபாணி குருக்கள் யாககுண்டத்தில் மிளகாய் வற்றல், பட்டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகத்தை நடத்தி வத்ததார். தொடர்ந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.இதில் பிரபல சினிமா டைரக்டர் டி.ராஜேந்தர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தனர். யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் அரசு சிறப்பு பஸ்கள் விடப்பட்டிருந்தது. பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அண்ணதானம் வழங்கப்பட்டது.