அறுபது தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் அறுபது படிகளைக்கொண்ட கோயில் சுவாமி மலை. மேல்தளத்தில் முருகன் சுவாமிநாதனாகக் காட்சியளிக்கிறார். கையிலுள்ள தண்டத்தை செங்கோல் என்றும் சொல்வர். தலையில் உச்சிக்குடுமி ஞானத்தைக் குறிக்கும். பழனி தண்டபாணிபோலவே இருப்பார். பழனியில் சிறிய உருவிலும் சுவாமிமலையில் பெரிய உருவிலும் இருக்கிறார். மூலவர் சிலைக்குக் கீழே பாதாளத்தில் ஒரு சித்தர் திருமேனி இருப்பதாக சொல்லப்படுகிறது. தாரக பரமேசுவரர் சுவாமிநாதருக்கு தகப்பனாராக இருக்கிறார். அவரையும் பக்தர்கள் வணங்கவேண்டும். சண்முகர் சந்நிதிக்கு எதிரே கார்த்தவீர்யாஜுனர் உள்ளார். அவரை இங்கு மட்டுமே காணமுடியும்.