பெருமாளும் முருகனும் நேருக்கு நேர் இருக்கும் அதிசயத்தைக் காண கருவளர்சேரி செல்லவேண்டும். கும்பகோணம் அருகே மருதாநல்லூருக்கு கிழக்கில் கருவளர்சேரி இருக்கிறது. இங்குள்ள அகத்தீஸ்வரர்அகிலாண்டேஸ்வரி கோயில் பிராகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீற்றிருந்து அருளுகிறார். இந்த முருகனுக்கு நேர் எதிரே, லட்சுமிநாராயணப் பெருமாள் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனை பெருமாள் பார்க்க, பெருமாளை முருகன் பார்க்கிறார். எனவே இவருடைய அருளாசியும் பக்தர்களுக்கு ஒருங்கே கிடைக்கிறது. அரியும் சிவனும் ஒன்று என்பதை மெய்ப்பிக்கும் வகையில் கருவளர்சேரியில் பெருமாள் கோயிலும் சிவன் கோயிலும் ஒரே இடத்தில் உள்ளது சிறப்பாகும்.