ஐந்து லட்சம் மல்லிகை பூவில் சுவாமிக்கு பூப் பல்லக்கு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2016 06:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் ஐந்து லட்சம் மல்லிகை பூவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடந்தது. பத்து நாள் திருவிழா நிறைவாக,நேற்று இரவு, கோயிலை சுற்றிய பகுதியில் பல்வேறு கலை, இசை நிகழ்ச்சி நடந்தது. சுற்று கிராமங்களைச் சேந்த ஏராளமான இளைஞர்கள் நிகழ்ச்சிகளை பார்க்க, கூடியிருந்தனர். மதுரையிலிருந்து 5 லட்சம் மல்லிகை பூ கொண்டு வந்து பல்லக்கை அலங்கரித்து, மின் விளக்குகள் பொருத்தப்பட்டன, பூப்பல்லக்கில் இரவு 1 மணிக்கு கோயிலிலிருந்து பூரணாதேவி, புஷ்லாதேவி சமேத சேவுகப்பெருமாள் சுவாமி புறப்பட்டார். நான்குரவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6 மணிக்கு சுவாமி சேர்க்கையானார். பூஜை,ஆராதனை களுடன் விழா நிறைவு பெற்றது.