பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவிலில் நடந்த அரவாணிகள் திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில், அரவாணிகள் திருவிழா நேற்று முன்தினம் நடந் தது. அதையொட்டி கடந்த 12ம் தேதி கொடியேற்றப்பட்டு தொடர்ந்து இரவு மகாபாரதம் நாடகம் நடந்தது. 21ம் தேதி அர்ச்சுனன் திரவுபதி திருக்கல் யாணமும், சுவாமி வீதியுலா காட்சியும் நடந்தது. 22ம் தேதி வீராட பர்வம் என்னும் மாடு பிடி சண்டையும், 23ம் தேதி சுவாமி வீதியுலாவும் நடந்தது. முக்கிய விழாவான அரவாணிகள் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. அதையொட்டி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந் தும் 300க்கும் மேற்பட்ட அரவாணிகள் குவிந்தனர். இரவு 9:30 மணியளவில் கோவில் முன் அரவாணிகளுக்கு கோவில் பூசாரி ராமதாஸ் தாலி கட்டினார். அதைத்தொடர்ந்து சுவாமி புஷ்ப பல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று 25ம் தேதி திருத்தேர் உற்சவமும், 64 அங்க லட்சணம் பொருந்திய அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடந்தது. கொத்தட்டை ஊராட்சி தலைவர் நாகராஜ் கூறுகையில், கூத்தாண்டவர் கோவிலில் 200 ஆண்டிற்குமேல் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட அரவாணிகள் மற்றும் கொத்தட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இந்த விழாவில் பங்கேற்பதால் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை. அதனால் இந்த விழாவை மாவட்ட நிர்வாகமே ஏற்று நடத்த வேண்டும்’ என்றார்.