Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கூத்தாண்டவர் கோவில் அரவாணிகள் ... செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் எப்போது?

பதிவு செய்த நாள்

26 மே
2016
10:05

ஆண்டிபட்டி: மாவூற்று வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த வனங்களுடன் கூடிய மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் நீர் சுனையாக மாறி உள்ளது. வறட்சியை ஏற்படுத்தும் கோடையிலும் சுனையில் நீர் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும். கோயிலுக்கு வரும் பக்தர்கள் சுனையில் நீராடி, முருகனை வழிபடுவதால் தீராத நோய்கள், மனக்கவலைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. தமிழ்புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் சித்திரை முதல் தேதியில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். காவடி எடுத்தும், பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும் வந்து வேலப்பரை வழிபடுவர். அடுத்தடுத்து வரும் நான்கு வாரங்களிலும் விழா நடைபெறும். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபடுவர்.

பல சிறப்புகள் கொண்ட கோயில் இந்து அறநிலையத்துறை மூலம் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இது நுாற்றாண்டைக்கடந்த, பாரம்பரியம் மிக்க கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்மிக ரீதியாக கவலை அளிப்பதாக உள்ளது. எனெனில் 12 ஆண்டிற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது ஐதீகம். ஆண்டிபட்டியைச்சேர்ந்த ரமணிகணபதி கூறியதாவது: வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து பக்தர்கள் சார்பில் அறநிலையத்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பான தன்னார்வக்குழு கொண்ட சிலருடன் ஆலோசிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகளைச்செய்ய, திருப்பணிக்கமிட்டி அமைக்கப்பட வேண்டும். கடந்த சில மாதங்களுக்கு முன் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, கிடப்பில் போய்விட்டது.இக கோயில் பக்தர்கள் சார்பில் அதற்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடரும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்ட உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ... மேலும்
 
temple news
பாலக்காடு : கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவருக்கு நடந்த ஜெயந்தன் பூஜை விழாவில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar